அகவிலைப்படி உயர்வு அறிவித்த முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி!
தமிழ்நாடு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவிப்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது… நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பின் தனது எழுச்சியுரையில் தனது ஆட்சியின் அச்சாணியாக விளங்கும் அரசு…