இது புல்டோசர் போகும் பாதை – இரா.இராஜாராம்
புல்டோசர்கள் போகும் பாதையில் வீடுகளைக் கட்டியது யார்? அந்த வீட்டின் சமையலறையில் மாட்டுக்கறி கொதிப்பதுவும் ஏன் ? அந்த வீட்டு அலமாரிகளில் பர்தாக்களுக்கும் புர்க்காக்களுக்கும் என்ன வேலை? பறக்கும் காகம் கருப்புதான் என்று அந்த வீட்டில் இருந்து ஏன் குரல் கேட்கிறது ? மாட்டுக்கறி கொதிப்பதும் மாட்டிக்கொள்ள புர்காவும் எதிர்க்கும் எதிர்க்குரலும் அந்த வீடுகளிலிருந்து வருமெனில்….. உங்கள் வீடுகளைச் சற்றே நகர்த்திக் கொள்ளுங்கள். “இது புல்டோசர் போகும் பாதை!” -இரா.இராஜாராம்.